தொடக்கம் |
|
|
4.97 திருநல்லூர் திருவிருத்தம் |
943 | “அட்டுமின், இல் பலி!” என்று என்று அகம் கடைதோறும் வந்து, மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்கொலோ?- கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும் நட்டம் நின்று ஆடிய நாதர், நல்லூர் இடம் கொண்டவரே. |
|
உரை
|
|
|
|
|
944 | “பெண் இட்டம் பண்டையது அன்று; இவை பெய் பலிக்கு” என்று உழல்வார் நண்ணிட்டு, வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே பண் இட்ட பாடலர் ஆடலராய்ப் பற்றி, நோக்கி நின்று, கண்ணிட்டு, போயிற்றுக் காரணம் உண்டு-கறைக்கண்டரே. |
|
உரை
|
|
|
|
|
945 | பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர்! பகலே ஒருவர் இடுவார் இடைப் பலி கொள்பவர் போல வந்து, இல் புகுந்து, நடவார்; அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்கொலோ? வடபால் கயிலையும் தென்பால் நல்லூரும் தம் வாழ் பதியே. |
|
உரை
|
|
|
|
|
946 | செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ் முத்து அனைய, நஞ்சு அணி கண்டன், நல்லூர் உறை நம்பனை, நான் ஒரு கால் துஞ்சு இடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு அவன் தான் நெஞ்சு இடை நின்று அகலான், பலகாலமும் நின்றனனே. |
|
உரை
|
|
|
|
|
947 | வெண்மதி சூடி விளங்க நின்றானை, விண்ணோர்கள் தொழ; நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே திண் நிலயம் கொடு நின்றான்; திரி புரம் மூன்று எரித்தான்; கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள, கழல்சேவடியே. |
|
உரை
|
|
|
|
|
948 | தேற்றப்படத் திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால் தோற்றப்படச் சென்று கண்டுகொள்ளார், தொண்டர், துன்மதியால்; ஆற்றில் கெடுத்துக் குளத்தினில்-தேடிய ஆதரைப் போல் காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர், காண்பதற்கே. |
|
உரை
|
|
|
|
|
949 | நாள் கொண்ட தாமரைப்பூத் தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே “கீள் கொண்ட கோவணம் கா!” என்று சொல்லிக் கிறிபடத் தான் வாள் கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கு ஓர் வாணிகனை ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ, இவ் அகலிடமே? |
|
உரை
|
|
|
|
|
950 | அறை மல்கு பைங்கழல் ஆர்க்க நின்றான்; அணி ஆர் சடைமேல் நறை மல்கு கொன்றை அம்தார் உடையானும்; நல்லூர் அகத்தே மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகிப் பரிசு அழித்தான்- பிறை மல்கு செஞ்சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே. |
|
உரை
|
|
|
|
|
951 | மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த, மருவி என்றும் துன்னிய தொண்டர்கள் இன் இசை பாடித் தொழுது, நல்லூர்க் கன்னியர் தாமும் கனவு இடை உன்னிய காதலரை, அன்னியர் அற்றவர், “அங்கணனே, அருள் நல்கு!” என்பரே. |
|
உரை
|
|
|
|
|
952 | திரு அமர் தாமரை, சீர் வளர் செங்கழுநீர், கொள் நெய்தல், குரு அமர் கோங்கம், குரா, மகிழ், சண்பகம், கொன்றை, வன்னி, மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர் உரு அமர் பாகத்து உமையவள் பாகனை உள்குதுமே. |
|
உரை
|
|
|
|
|
953 | செல் ஏர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும் வல்லேன், புகவும்; மதில் சூழ் இலங்கையர் காவலனைக் கல் ஆர் முடியொடு தோள் இறச் செற்ற கழல் அடியான், நல்லூர் இருந்த பிரான் அல்லனோ, நம்மை ஆள்பவனே? |
|
உரை
|
|
|
|