தொடக்கம் |
|
|
4.99 திருக்கச்சி ஏகம்பம் திருவிருத்தம் |
956 | ஓதுவித்தாய், முன் அற உரை; காட்டி அமணரொடே காதுவித்தாய்; கட்டம், நோய், பிணி, தீர்த்தாய்; கலந்து அருளிப் போதுவித்தாய்; நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால் மோதுவிப்பாய்; உகப்பாய்; முனிவாய்-கச்சி ஏகம்பனே! |
|
உரை
|
|
|
|
|
957 | எத்தைக்கொடு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து,-எனை,- கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுவித்தென்னக் கோகு செய்தாய்?- முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவளத்- தொத்தினை ஏய்க்கும் படியாய்! பொழில் கச்சி ஏகம்பனே! |
|
உரை
|
|
|
|
|
958 | மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்ப் பொய் அம்பு எய்து, ஆவம் அருளிச்செய்தாய்; புரம் மூன்று எரியக் கை அம்பு எய்தாய்; நுன் கழல் அடி போற்றாக் கயவர் நெஞ்சில் குய்யம் பெய்தாய்-கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே! |
|
உரை
|
|
|
|
|
959 | குறிக்கொண்டு இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல் நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான், கறைக்கண்ட! நீ ஒரு பூக் குறைவித்துக் கண் சூல்விப்பதே? பிறைத்துண்ட வார்சடையாய்! பெருங் காஞ்சி எம் பிஞ்ஞகனே! |
|
உரை
|
|
|
|
|
960 | உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான்; உள்குவார் வினையைக் கரைக்கும் எனக் கைதொழுவது அல்லால், கதிரோர்கள் எல்லாம், விரைக்கொள் மலரவன், மால், எண்வசுக்கள், ஏகாதசர்கள், இரைக்கும் அமிர்தர்க்கு, அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே. |
|
உரை
|
|
|
|
|
961 | கரு உற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு(வ்) உருகிற்று, என் உள்ளமும்; நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன்; திரு ஒற்றியூரா! திரு ஆலவாயா! திரு ஆரூரா! ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய்-கச்சி ஏகம்பனே! |
|
உரை
|
|
|
|
|
962 | அரி, அயன், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம், உரிய நின் கொற்றக் கடைத்தலையார் உணங்காக் கிடந்தார்; புரிதரு புன் சடைப் போக முனிவர் புலம்புகின்றார்;- எரிதரு செஞ்சடை ஏகம்ப!-என்னோ, திருக்குறிப்பே? |
|
உரை
|
|
|
|
|
963 | பாம்பு அரைச் சேர்த்திப் படரும் சடைமுடிப் பால்வண்ணனே! கூம்பலைச் செய்த கரதலத்து அன்பர்கள் கூடிப் பல்-நாள் சாம்பலைப் பூசி, தரையில் புரண்டு, “நின் தாள் சரண்” என்று ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய்-கச்சி ஏகம்பனே! |
|
உரை
|
|
|
|
|
964 | ஏன்று கொண்டாய், என்னை; எம்பெருமான்! இனி, “அல்லம்” என்னில், சான்று கண்டாய் இவ் உலகம் எல்லாம்; தனியேன் என்று என்னை ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய்; பின்னை ஒற்றி எல்லாம் சோன்றுகொண்டாய்-கச்சி ஏகம்பம் மேய சுடர் வண்ணனே! |
|
உரை
|
|
|
|
|
965 | உந்தி நின்றார், உன் தன் ஓலக்கச் சூளைகள்; வாய்தல் பற்றித் துன்றி நின்றார், தொல்லை வானவர் ஈட்டம்; பணி அறிவான் வந்து நின்றார், அயனும் திருமாலும்;-மதில் கச்சியாய்!- இந்த நின்றோம் இனி எங்ஙனமோ, வந்து இறைஞ்சுவதே? |
|
உரை
|
|
|
|