தொடக்கம் |
|
|
4.101 திருஆரூர் திருவிருத்தம் |
976 | குலம் பலம் பாவரு குண்டர்முன்னே நமக்கு உண்டுகொலோ- அலம்பு அலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான், சிலம்பு அலம்பா வரு சேவடியான், திரு மூலட்டானம் புலம்பு அலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே? |
|
உரை
|
|
|
|
|
977 | மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர் சொல்-திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டுகொலோ- வில்-திடம் வாங்கி, விசயனொடு அன்று ஒரு வேடுவனாய், புற்று இடம்கொண்டான்தன் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே? |
|
உரை
|
|
|
|
|
978 | ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர்முன் நமக்கு உண்டுகொலோ- செரு வடி வெஞ்சிலையால் புரம் அட்டவன், சென்று அடையாத் திரு உடையான், திரு ஆரூர்த் திருமூலட்டானன், செங்கண் பொரு விடையான், அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே? |
|
உரை
|
|
|
|
|
979 | மாசினை ஏறிய மேனியர், வன்கண்ணர், மொண்ணரை விட்டு ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டுகொலோ- தேசனை, ஆரூர்த் திருமூலட்டானனை, சிந்தைசெய்து பூசனைப் பூசுரர்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே? |
|
உரை
|
|
|
|
|
980 | அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று, வருந்தி நினைந்து, “அரனே!” என்று வாழ்த்துவேற்கு உண்டுகொலோ- திருந்திய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப் பொருந்தும் தவம் உடைத் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே? |
|
உரை
|
|
|
|
|
981 | வீங்கிய தோள்களும் தாள்களும் ஆய் நின்று, வெற்று அரையே மூங்கைகள் போல் உண்ணும் மூடர்முன்னே நமக்கு உண்டு கொலோ- தேம் கமழ் சோலைத் தென் ஆரூர்த் திருமூலட்டானன், செய்ய- பூங்கழலான், அடித் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே? |
|
உரை
|
|
|
|
|
982 | பண்ணிய சாத்திரப் பேய்கள் பறி தலைக் குண்டரை விட்டு எண் இல் புகழ் ஈசன்தன் அருள் பெற்றேற்கும் உண்டுகொலோ- திண்ணிய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானன், எங்கள் புண்ணியன் தன் அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே? |
|
உரை
|
|
|
|
|
983 | கரப்பர்கள், மெய்யை; “தலை பறிக்கச் சுகம்” என்னும் குண்டர் உரைப்பன கேளாது, இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ- திருப் பொலி ஆரூர்த் திருமூலட்டானன், திருக்கயிலைப்- பொருப்பன், விருப்பு அமர் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே? |
|
உரை
|
|
|
|
|
984 | கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு, உய்யும் நெறி கண்டு, இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ- ஐயன், அணி வயல் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப் பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே? |
|
உரை
|
|
|
|
|
985 | குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு, உற்ற கருமம் செய்து, உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ- மல் பொலி தோளான், இராவணன்தன் வலி வாட்டுவித்த பொன் கழலான், அடித் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே? |
|
உரை
|
|
|
|