தொடக்கம் |
|
|
4.102 திருஆரூர் திருவிருத்தம் |
986 | வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி, வினை பெருக்கி, தூம்பினைத் தூர்த்து, அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர், தொண்டீர்! ஆம்பல் அம்பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழல் கீழ், சாம்பலைப் பூசி, சலம் இன்றி, தொண்டுபட்டு உய்ம்மின்களே! |
|
உரை
|
|
|
|
|
987 | ஆராய்ந்து, அடித்தொண்டர் ஆணிப் பொன், ஆரூர் அகத்து அடக்கிப் பார் ஊர் பரப்பத் தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான், நார் ஊர் நறுமலர் நாதன், அடித்தொண்டன் நம்பி நந்தி நீரால்-திருவிளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே! |
|
உரை
|
|
|
|
|
988 | பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால் ஆம் படிமக் கலம் ஆகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார்- தாம் படிமக் கலம் வேண்டு வரேல்,-தமிழ் மாலைகளால் நாம் படிமக்கலம் செய்து தொழுதும், மட நெஞ்சமே! |
|
உரை
|
|
|
|
|
989 | துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து, துளங்கா மதி அணிந்து, முடித் தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி, பொடிக்கொண்டு பூசிக் புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால் அடித்தொண்டன் நந்தி என்பான் உளன், ஆரூர் அமுதினுக்கே. |
|
உரை
|
|
|
|
|
990 | கரும்பு பிடித்தவர் காயப்பட்டார்; அங்கு ஓர் கோடலியால் இரும்பு பிடித்தவர் இன்பு உறப்பட்டார்; இவர்கள் நிற்க, அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான் விரும்பு மனத்தினை, “யாது ஒன்று?” நான் உன்னை வேண்டுவனே. |
|
உரை
|
|
|
|
|
991 | கொடி, கொள் விதானம், கவரி, பறை, சங்கம், கைவிளக்கோடு, இடிவு இல் பெருஞ் செல்வம் எய்துவர்; எய்தியும் ஊனம் இல்லா அடிகளும் ஆரூர் அகத்தினர் ஆயினும், அம் தவளப்- பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும், நந்தி புறப்படினே. |
|
உரை
|
|
|
|
|
992 | சங்கு ஒலிப்பித்திடுமின், சிறுகாலைத் தடவு அழலில் குங்கிலியப்புகைக்கூட்டு என்றும் காட்டி! இருபதுதோள் அங்கு உலம் வைத்தவன் செங்குருதிப்புனல் ஓட அஞ் ஞான்று அங்குலி வைத்தான் அடித்தாமரை என்னை ஆண்டனவே. |
|
உரை
|
|
|
|