தொடக்கம் |
|
|
4.103 திருநாகைக்காரோணம் திருவிருத்தம் |
993 | வடிவு உடை மாமலைமங்கை பங்கா! கங்கை வார்சடையாய்! கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே! பிடி மதவாரணம் பேணும் துரகம் நிற்க, பெரிய இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னைகொல்? எம் இறையே! |
|
உரை
|
|
|
|
|
994 | கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே! வில்-தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே; நல்-தாள் நெடுஞ் சிலை நாண் வலித்த(க்) கரம் நின் கரமே; செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை கொல்? செப்புமினே! |
|
உரை
|
|
|
|
|
995 | தூ மென் மலர்க்கணை கோத்துத் தீவேள்வி தொழில் படுத்த காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக்காரோண! நின் நாமம் பரவி, நமச்சிவாய என்னும் அஞ்சு எழுத்தும் சாம் அன்று உரைக்கத் தருதி கண்டாய், எங்கள் சங்கரனே! |
|
உரை
|
|
|
|
|
996 | பழிவழி ஓடிய பாவிப் பறி தலைக் குண்டர் தங்கள் மொழிவழி ஓடிமுடிவேன்; முடியாமைக் காத்துக் கொண்டாய்; கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண! என் வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள், எங்கள் வானவனே! |
|
உரை
|
|
|
|
|
997 | செந்துவர் வாய்க் கருங்கண் இணை வெண் நகைத் தேமொழியார் வந்து, வலம் செய்து, மா நடம் ஆட, மலிந்த செல்வக் கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும் சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும், திருமங்கையே. |
|
உரை
|
|
|
|
|
998 | பனை புரை கைம் மதயானை உரித்த பரஞ்சுடரே! கனைகடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே!- மனை துறந்து அல் உணா வல் அமண்குண்டர் மயக்கை நீக்கி எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என், இனி யான் செயும் இச்சைகளே? |
|
உரை
|
|
|
|
|
999 | சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே! கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!- வார் மலி மென் முலையார் பலி வந்து இடச் சென்று இரந்து, ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ? உரையே! |
|
உரை
|
|
|
|
|
1000 | வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே! எங்கள் பெருமான்! ஓர் விண்ணப்பம் உண்டு; அது கேட்டு அருளீர்: கங்கை சடையுள் கரந்தாய்; அக் கள்ளத்தை மெள்ள உமை- நங்கை அறியின் பொல்லாது கண்டாய், எங்கள் நாயகனே! |
|
உரை
|
|
|
|
|
1001 | “கருந்தடங் கண்ணியும் தானும் கடல் நாகைக்காரோணத்தான் இருந்த திருமலை” என்று இறைஞ்சாது அன்று எடுக்கல் உற்றான் பெருந் தலைபத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற இருந்து அருளிச் செய்ததே; மற்றுச் செய்திலன் எம் இறையே. |
|
உரை
|
|
|
|