4.104 திருஅதிகைவீரட்டானம்
திருவிருத்தம்
1002மாசு இல் ஒள்வாள் போல் மறியும் மணி நீர்த் திரைத் தொகுதி
ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கல் உற்றால்,
பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு,
வீசும் கெடில வடகரைத்தே-எந்தை வீரட்டமே.
உரை
   
1003பைங்கால்-தவளை பறை கொட்ட, பாசிலை நீர்ப் படுகர்
அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப, அருகு உலவும்
செங்கால் குருகு இவை சேரும் செறி கெடிலக் கரைத்தே-
வெங் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே.
உரை
   
1004அம் மலர்க் கண்ணியர் அஞ்சனம்,- செந்துவர்வாய் இளையார்-
வெம் முலைச் சாந்தம், விலை பெறு மாலை, எடுத்தவர்கள்,
தம் மருங்கிற்கு இரங்கார், தடந் தோள் மெலியக் குடைவார்
விம்மு புனல் கெடிலக் கரைத்தே-எந்தை வீரட்டமே.
உரை
   
1005மீன் உடைத் தண்புனல் வீரட்டரே! நும்மை வேண்டுகின்றது
யான் உடைச் சில்குறை ஒன்று உளதால்; நறுந்தண் எருக்கின்
தேன் உடைக் கொன்றைச் சடை உடைக் கங்கைத் திரை தவழும்
கூன் உடைத் திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்மினே!
உரை
   
1006ஆர் அட்டதேனும் இரந்து, உண்டு, அகம் அகவன் திரிந்து,
வேர் அட்ட, நிற்பித்திடுகின்றதால்-விரிநீர்ப் பரவைச்
சூர் அட்ட வேலவன் தாதையை, சூழ் வயல் ஆர் அதிகை-
வீரட்டத்தானை, விரும்பா அரும்பாவவேதனையே.
உரை
   
1007படர் பொன்சடையும், பகுவாய் அரவும், பனிமதியும்,
சுடலைப் பொடியும், எல்லாம் உளவே; அவர் தூய தெண் நீர்க்
கெடிலக் கரைத் திரு வீரட்டர் ஆவர்; கெட்டேன்! அடைந்தார்
நடலைக்கு நல்-துணை ஆகும்கண்டீர், அவர் நாமங்களே.
உரை
   
1008காளம் கடந்தது ஓர் கண்டத்தர் ஆகிக் கண் ஆர் கெடில
நாள் அங்கடிக்கு ஓர் நகரமும், மாதிற்கு நன்கு இசைந்த
தாளங்கள் கொண்டும், குழல் கொண்டும், யாழ் கொண்டும், தாம் அங்ஙனே
வேடங்கள் கொண்டும், விசும்பு செல்வார் அவர்-வீரட்டரே.
உரை