தொடக்கம் |
|
|
4.105 திருப்புகலூர் திருவிருத்தம் |
1009 | தன்னைச் சரண் என்று தாள் அடைந்தேன்; தன் அடி அடைய, புன்னைப் பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்மின்களோ! என்னைப் பிறப்பு அறுத்து, என் வினை கட்டு அறுத்து, ஏழ் நரகத்து என்னைக் கிடக்கல் ஒட்டான், சிவலோகத்து இருத்திடுமே. |
|
உரை
|
|
|
|
|
1010 | பொன்னை வகுத்தன்ன மேனியனே! புணர் மென் முலையாள் தன்னை வகுத்தன்ன பாகத்தனே, தமியேற்கு இரங்காய்! புன்னை மலர்த்தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே! என்னை வகுத்திலையேல், இடும்பைக்கு இடம் யாது? சொல்லே! |
|
உரை
|
|
|
|
|
1011 | பொன் அளவு ஆர் சடைக் கொன்றையினாய்! புகலூர்க்கு அரசே! மன் உள தேவர்கள் தேடும் மருந்தே! வலஞ்சுழியாய்!- என் அளவே, உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார்! உன் அளவே, எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே! |
|
உரை
|
|
|
|
|
1012 | ஓணப் பிரானும், ஒளிர் மா மலர்மிசை உத்தமனும், காணப் பராவியும் காண்கின்றிலர்; கரம் நால்-ஐந்து உடைத் தோள் நப்பிரானை வலி தொலைத்தோன், தொல்லைநீர்ப் புகலூர்க் கோணப்பிரானைக் குறுக, குறுகா, கொடுவினையே. |
|
உரை
|
|
|
|