தொடக்கம் |
|
|
4.106 திருக்கழிப்பாலை திருவிருத்தம் |
1013 | நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கிச் சென்று, கைதைமடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய்! பைதல் பிறையொடு பாம்பு உடன் வைத்த பரிசு அறியோம்; எய்தப் பெறின் இரங்காதுகண்டாய்-நம் இறையவனே! |
|
உரை
|
|
|
|
|
1014 | பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை பொரு மால் கரைமேல்-திரை கொணர்ந்து ஏற்றப் பொலிந்து இலங்கும் கரு மா மிடறு உடைக் கண்டன், எம்மான் கழிப்பாலை எந்தை, பெருமான் அவன்,என்னை ஆள் உடையான், இப் பெரு நிலத்தே. |
|
உரை
|
|
|
|
|
1015 | நாள்பட்டு இருந்து இன்பம் எய்தல் உற்று, இங்கு நமன்தமரால் கோட்பட்டு ஒழிவதன் முந்து உறவே, குளிர் ஆர் தடத்துத் தாள் பட்ட தாமரைப் பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு ஆட் பட்டொழிந்தம் அன்றே, வல்லம் ஆய் இவ் அகலிடத்தே! |
|
உரை
|
|
|
|