தொடக்கம் |
|
|
4.107 திருக்கடவூர் திருவிருத்தம் |
1016 | மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த மாணிமார்க்கண்டேயற்கு ஆய்- இருட்டிய மேனி, வளைவாள் எயிற்று, எரி போலும் குஞ்சி, சுருட்டிய நாவில்-வெங் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே உருட்டிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே. |
|
உரை
|
|
|
|
|
1017 | பதத்து எழு மந்திரம் அஞ்சு எழுத்து ஓதிப் பரிவினொடும் இதத்து எழு மாணிதன் இன் உயிர் உண்ண வெகுண்டு அடர்த்த கதத்து எழு காலனைக் கண் குருதிப் புனல் ஆறு ஒழுக உதைத்து எழு சேவடியான்கடவூர் உறை உத்தமனே. |
|
உரை
|
|
|
|
|
1018 | கரப்பு உறு சிந்தையர் காண்டற்கு அரியவன்; காமனையும் நெருப்பு உமிழ் கண்ணினன்; நீள் புனல் கங்கையும், பொங்கு அரவும், பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன்; காலனைப் பண்டு ஒரு கால் உரப்பிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே. |
|
உரை
|
|
|
|
|
1019 | மறி(த்) திகழ் கையினன்; வானவர்கோனை மனம் மகிழ்ந்து குறித்து எழு மாணிதன் ஆர் உயிர் கொள்வான் கொதித்த சிந்தை, கறுத்து எழு மூஇலைவேல் உடை, காலனைத் தான் அலற உறுக்கிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே. |
|
உரை
|
|
|
|
|
1020 | குழை(த்) திகழ் காதினன்; வானவர்கோனைக் குளிர்ந்து எழுந்து பழக்கமொடு அர்ச்சித்த மாணிதன் ஆர் உயிர் கொள்ள வந்த, தழல் பொதி மூஇலைவேல் உடை, காலனைத் தான் அலற உழக்கிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே. |
|
உரை
|
|
|
|
|
1021 | பாலனுக்கு ஆய் அன்று பாற்கடல் ஈந்து, பணைத்து எழுந்த ஆலினின் கீழ் இருந்து ஆரணம் ஓதி, அரு முனிக்கு ஆய்,- சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடி வந்த காலனைக் காய்ந்த பிரான்கடவூர் உறை உத்தமனே. |
|
உரை
|
|
|
|
|
1022 | படர்சடைக் கொன்றையும், பன்னகமாலை, பணி கயிறா உடைதலை கோத்து, உழல் மேனியன்; உண்பலிக்கு என்று உழல்வோன்; சுடர் பொதி மூஇலைவேல் உடைக் காலனைத் துண்டம் அதா உடறிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே. |
|
உரை
|
|
|
|
|
1023 | வெண் தலை மாலையும், கங்கை, கரோடி, விரிசடைமேல் பெண்டு அணி நாயகன்; பேய் உகந்து ஆடும் பெருந்தகையான்; கண் தனி நெற்றியன்; காலனைக் காய்ந்து, கடலின் விடம் உண்டு அருள் செய்த பிரான்கடவூர் உறை உத்தமனே |
|
உரை
|
|
|
|
|
1024 | கேழல் அது ஆகிக் கிளறிய கேசவன் காண்பு அரிது ஆய், வாழி நல் மா மலர்க்கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று ஆழியும் ஈந்து(வ்), அடு திறல் காலனை அன்று அடர்த்து(வ்), ஊழியும் ஆய பிரான்கடவூர் உறை உத்தமனே. |
|
உரை
|
|
|
|
|
1025 | தேன் திகழ் கொன்றையும், கூவிளமாலை, திருமுடிமேல் ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான்; மலை ஆர்த்து எடுத்த கூன் திகழ் வாள் அரக்கன் முடிபத்தும் குலைந்து விழ ஊன்றிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே. |
|
உரை
|
|
|
|