தொடக்கம் |
|
|
4.109 திருக்கடந்தைத் தூங்கானைமாடம் திருவிருத்தம் |
1028 | பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு, விண்ணப்பம்: போற்றி செய்யும் என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல், இருங் கூற்று அகல மின் ஆரும் மூஇலைச்சூலம் என்மேல் பொறி-மேவு கொண்டல் துன் ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே! |
|
உரை
|
|
|
|
|
1029 | “ஆவா! சிறுதொண்டன் என் நினைந்தான்!” என்று அரும் பிணிநோய் காவாது ஒழியின் கலக்கும், உன்மேல் பழி; காதல் செய்வார் தேவா! திருவடி நீறு என்னைப் பூசு-செந்தாமரையின் பூ ஆர் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் புண்ணியனே! |
|
உரை
|
|
|
|
|
1030 | கடவும் திகிரி கடவாது ஒழியக் கயிலை உற்றான் படவும் திருவிரல் ஒன்று வைத்தாய்; பனிமால்வரை போல் இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய்-இருஞ் சோலை திங்கள் தடவும் கடந்தையுள்-தூங்கானை மாடத்து எம் தத்துவனே! |
|
உரை
|
|
|
|