தொடக்கம் |
|
|
4.111 “சரக்கறை” திருவிருத்தம் |
1039 | விடையும் விடைப் பெரும் பாகா! என் விண்ணப்பம்: வெம்மழுவாள்- படையும், படை ஆய் நிரைத்த பல் பூதமும், பாய்புலித்தோல்- உடையும், முடைத்தலைமாலையும், மாலைப் பிறை ஒதுங்கும் சடையும், இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே! |
|
உரை
|
|
|
|
|
1040 | விஞ்சத் தடவரை வெற்பா! என் விண்ணப்பம்; மேல் இலங்கு சங்கக் கலனும், சரி கோவணமும், தமருகமும், அந்திப் பிறையும், அனல் வாய் அரவும், விரவி எல்லாம் சந்தித்து இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே! |
|
உரை
|
|
|
|
|
1041 | வீந்தார் தலைகலன் ஏந்தீ! என் விண்ணப்பம்: மேல் இலங்கு சாந்து ஆய வெந்ததவள-வெண் நீறும், தகுணிச்சமும், பூந்தாமரை மேனி, புள்ளி உழை-மான் அதள், புலித்தோல், தாம்தாம் இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே! |
|
உரை
|
|
|
|
|
1042 | வெஞ்சமர் வேழத்து உரியாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும், வான்மதியும், நஞ்சம் மா நாகம், நகுசிரமாலை, நகுவெண்தலை, தஞ்சமா வாழும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே! |
|
உரை
|
|
|
|
|
1043 | வேலைக்-கடல் நஞ்சம் உண்டாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு காலற் கடந்தான் இடம் கயிலாயமும், காமர் கொன்றை, மாலைப் பிறையும், மணி வாய் அரவும், விரவி எல்லாம் சாலக் கிடக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே! |
|
உரை
|
|
|
|
|
1044 | வீழிட்ட கொன்றை அம்தாராய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு சூழ் இட்டு இருக்கும் நல் சூளாமணியும், சுடலை நீறும், ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும், அரவும், என்பு, ஆமை ஓடும், தாழ் இட்டு இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே! |
|
உரை
|
|
|
|
|
1045 | விண்டார் புரம் மூன்றும் எய்தாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி-நீறும், தொழுது பாதம் கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும், காமர் கொன்றைத்- தண்தார் இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே! |
|
உரை
|
|
|
|
|
1046 | விடு பட்டி ஏறு உகந்து ஏறீ! என் விண்ணப்பம்: மேல் இலங்கு கொடு கொட்டி, கொக்கரை, தக்கை, குழல், தாளம், வீணை, மொந்தை, வடு விட்ட கொன்றையும், வன்னியும், மத்தமும், வாள் அரவும், தடுகுட்டம் ஆடும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே! |
|
உரை
|
|
|
|
|
1047 | வெண் திரைக் கங்கை விகிர்தா! என் விண்ணப்பம்: மேல் இலங்கு கண்டிகை பூண்டு, கடி சூத்திரம்மேல் கபாலவடம், குண்டிகை, கொக்கரை, கொன்றை, பிறை, குறள் பூதப்படை தண்டி வைத்திட்ட சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே! |
|
உரை
|
|
|
|
|
1048 | வேதித்த வெம்மழு ஆளீ! என் விண்ணப்பம்: மேல் இலங்கு சோதித் திருக்கும், நல் சூளாமணியும், சுடலை நீறும், பாதிப்பிறையும், படுதலைத்துண்டமும், பாய் புலித்தோல், சாதித்து இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே! |
|
உரை
|
|
|
|
|
1049 | விவந்து ஆடிய கழல் எந்தாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு தவந்தான் எடுக்கத் தலைபத்து இறுத்தனை; தாழ் புலித்தோல் சிவந்து ஆடிய பொடி-நீறும், சிரமாலை சூடி நின்று தவம் தான் இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே! |
|
உரை
|
|
|
|