தொடக்கம் |
|
|
1050 | வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்; வீழ்ந்து இலங்கு வெள்ளிப் புரி அன்ன வெண் புரிநூலன் விரிசடைமேல் வெள்ளித் தகடு அன்ன வெண்பிறை சூடி, வெள் என்பு அணிந்து, வெள்ளிப் பொடிப் பவளப்புறம் பூசிய வேதியனே. |
|
உரை
|
|
|
|
|
1051 | உடலைத் துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்பக் கடலைக் கடந்து, உய்யப் போயிடல் ஆகும்; கனகவண்ணப் படலைச் சடை, பரவைத் திரைக் கங்கை, பனிப்பிறை, வெண் சுடலைப் பொடி, கடவுட்கு அடிமைக்கண்-துணி, நெஞ்சமே! |
|
உரை
|
|
|
|
|
1052 | முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்; இம் மூ உலகுக்கு அன்னையும் அத்தனும் ஆவாய்-அழல்வணா!-நீ அலையோ? உன்னை நினைந்தே கழியும், என் ஆவி; கழிந்ததன் பின் என்னை மறக்கப்பெறாய்; எம்பிரான்! உன்னை வேண்டியதே. |
|
உரை
|
|
|
|
|
1053 | நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய், நீ; நினையப் புகில் பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி; உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும் என்னை ஒப்பார் உளரோ? சொல்லு, வாழி!-இறையவனே! |
|
உரை
|
|
|
|
|
1054 | முழுத்தழல்மேனித் தவளப்பொடியன், கனகக்குன்றத்து எழில் பரஞ்சோதியை, எங்கள் பிரானை, இகழ்திர்கண்டீர்; தொழப்படும் தேவர் தொழப்படுவானைத் தொழுத பின்னை, தொழப்படும் தேவர்தம்மால்-தொழுவிக்கும் தன் தொண்டரையே. |
|
உரை
|
|
|
|
|
1055 | விண் அகத்தான்; மிக்க வேதத்து உளான்; விரிநீர் உடுத்த மண் அகத்தான்; திருமால் அகத்தான்; மருவற்கு இனிய பண் அகத்தான்; பத்தர் சித்தத்து உளான்; பழ நாய் அடியேன் கண் அகத்தான்; மனத்தான்; சென்னியான் எம் கறைக்கண்டனே. |
|
உரை
|
|
|
|
|
1056 | பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய் இருங்கடல் மூடி இறக்கும்; இறந்தான் களேபரமும் கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு, கங்காளராய், வரும் கடல் மீள நின்று, எம் இறை நல் வீணை வாசிக்குமே. |
|
உரை
|
|
|
|
|
1057 | வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்? மால்வரையும் தானம் துளங்கித் தலைதடுமாறில் என்? தண்கடலும் மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்?-வேலை நஞ்சு உண்டு ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே. |
|
உரை
|
|
|
|
|
1058 | சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான் அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும் ஆகில், அவன் தனை யான் பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பல்-நாள் அழைத்தால், “இவன் எனைப் பல்-நாள் அழைப்பு ஒழியான்” என்று எதிர்ப்படுமே! |
|
உரை
|
|
|
|
|
1059 | என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர்? இகலி, உன்னை நின்னை ஒப்பார் நின்னைக் காணும் படித்து அன்று, நின் பெருமை- பொன்னை ஒப்பாரித்து, அழலை வளாவி, செம்மானம் செற்று, மின்னை ஒப்பாரி, மிளிரும் சடைக்கற்றை வேதியனே! |
|
உரை
|
|
|
|