பாடல் எண் : 10 - 9
சுண்ண வெண்பொடிப் பூசுஞ் சுவண்டரோ
பண்ணி யேறுகந் தேறும் பரமரோ
அண்ண லாதி யணிமறைக் காடரோ
திண்ண மாக்கத வந்திறப் பிம்மினே.
9
பொ-ரை: வெண்பொடிச் சுண்ணம் பூசும் உயர்ந்த தேவரே! அழகுசெய்து ஏற்றின்கண் ஏறி உயர்ந்து தோன்றும் பரமரே! அண்ணலே! ஆதியே! அணிமறைக் காட்டுறையும் பெருமானே! திண்ணமாக இக்கதவினைத் திறப்பித்தருள்வீராக.
கு-ரை: சுண்ணமும் வெண்பொடியும் எனினும் அமையும்; கலவைச்சாந்தும் திருநீறும் என்பது பொருள். பண்ணி - அலங்கரித்து. அண்ணல் - தலைமையானவன். ஆதி - முதன்மையானவன். திண்ணம் உறுதி.