|
பொ-ரை: திருநீறு பூசும் விகிர்தரும், நறுமண மாலைகள் சூடும் தலைவரும், என் தந்தை போல்வாருமாகிய திருவிடைமருதூர் ஈசனைச் சிந்தையால் நினைப்பவர்களது வினைகள் தேயும். கு-ரை: வெந்த வெண்பொடி-தமது அருளொளியால் பொருள் அனைத்தும் வெந்து நீறாக(மாயா சத்தி ரூபமாக) வந்த வெண்பொடி கந்தம்-வாசனை. கருத்தனார்-கருத்தின்கண் விளங்குபவன் எனினும் பொருந்தும். |