|
பொ-ரை: காற்றும் கனலும் ஆவான்; கதிர்விக்கும் மாமணிமேற் சண்ணித்த திருநீறு போன்ற திருமேனியுடையான்; அத்திருமேனியை நினைப்பார் வினையை நீக்குபவன். கூற்றினை உதைத்த குணமுடைய தனிச்சிறப்புடையவன். இப்பெருமானை நேற்றுக் காண்டற்கு இடமாக இருந்த திருவெண்ணியே எனக்கு இதுபோது பேரின்பத்தைப் பெருக்குவது. கு-ரை: காற்றினை - காற்று வடிவானவனை. கனலை - அனல் வடிவினனை. கதிர்மாமணி - ஒளியையுடைய சிறந்தமணி போன்றவனை. நினைப்பார் - தன்னை நினைப்பாரின். வினை நீக்கிடும் - வினைகளைப்போக்கும். நீற்றினை - திருநீறணிந்தவனை - அல்லது; நினைப்பவர் வினையை நீறாக்கியவனை என்க. குணமுடை - அபயமாக அடைந்தவரைக் காக்கும் குணமுடைய. வீற்றினை - வீறு. பெருமை - பெருமை வடிவினனை. "தொழுதெழுவார் வினை வளம் நீறெழ நீறணியம்பலவன்" என்னும் (தி.8) திருக்கோவையார் ஒப்பிடத்தக்கது. |