|
பொ-ரை: எளியனாக மொழியாத இலங்கைக்கு இறைவனாம் இராவணன் செருக்கினாற் கயிலாயம் எடுத்தபோது நெளியுமாறு திருவிரலால் ஊன்ற வல்லவன் அமர்கின்ற திருநின்றியூரை அன்பினால் தொழுவார்களின் வினைகள் சுருங்கும். கு-ரை: எளியனாமொழியா - யாரிடத்தும்தான் எளியனாய் மொழிபயிலாத ; பிறரால் எளியன் என்று சொல்லப்படாத. இறை - தலைவன். களியினால் - மகிழ்ச்சி மயக்கத்தால். நெளிய - துன்பமுற அளியினால் - அன்பினால். அல்கும் - இல்லாமற்போகும். |