|
பொ-ரை: உமையம்மையாரை ஒரு பாகமாக வைத்த வன்னியூரில் வீற்றிருக்கும் இறைவர், அரையின்கண் சிவந்த கண்ணையுடைய நாகத்தைக் கட்டியவர்; தீத்தொகுதியை அழகிய கரத்தில் ஏந்தி ஆடுபவர்; நீண்ட சடைமேலிடத்தில் கங்கையைக் கொண்டவர். கு-ரை: செங்கண் நாகம் - சிவந்த கண்ணை உடைய பாம்பு. அரையது - இடுப்பின் கண்ணது. ஏந்தி நின்றாராய் எரியாடுபவர் என்க. வார்சடை மேலிடம் கங்கை கொண்டவர் என்க. |