|
பொ-ரை : ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் எல்லோரும் விரும்பும் இயல்பும் வேதத்தின் இயல்பும், கரும்பினையொத்த இனிய மொழியையுடைய உமையம்மையார் இயல்பும், தம்மை விரும்பும் மெய்யடியார்களின் வினைகளைத் தீர்த்திடும் இயல்பும், அரும்பின் இயல்பும் உடையராவர். கு-ரை : விரும்பும் வண்ணம் - மெய்யன்பர் விரும்பும் வடிவங்கள். வேதத்தின் வண்ணம் - வேதங்களை வெளிப்படுத்தும் தன்மை. வேதவடிவம் எனலுமாம். இன்மொழிக் காரிகை - பார்வதி. விரும்புவார் - தன்னை நேசிப்பார். வினைதீர்த்திடும் வண்ணம் - காரிகை வடிவம் கொண்டிருப்பதுவினை தீர்த்தற்பொருட்டு என்க. அரும்பின் வண்ணம் - மணத்தை உள்ளடக்கிய அரும்பின் தன்மை. |