|
பொ-ரை: அறியாமை உடைய நெஞ்சமே! உன்னைக் கெடுக்கும் இயல்புடையனவாகிய குலம், நலம், சுற்றம், பாசம் முதலியவை அற்று மிக உயர்ந்த ஆனந்த ஆசை உற்று, ஆனைக்காவின் அண்ணலை நேசமாகி நினைந்து உய்வாயாக. கு-ரை: நேசமாகி - அன்புமயமாகி. மடநெஞ்சமே - இதுவரை அறியாதிருந்த மனமே. நினை - நினைப்பாயாக. நாசமாய - அழிவனவாகிய. குலநலம் - குலத்தின் உயர்வு. பராபர ஆனந்தம் - மிக மேலான இன்பம். உற்றிடும் - உறுவிக்கும். |