பாடல் எண் : 33 - 10
மிண்ட ரோடு விரவியும் வீறிலாக்
குண்டர் தம்மைக் கழிந்துய்யப் போந்துநீ
தொண்டு செய்தென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
உண்டு நீபணி செய்மட நெஞ்சமே.
10
பொ-ரை: அறியாமையை உடைய நெஞ்சமே! அமண்முண்டர்களோடு கலந்தும், பெருமையில்லாத குண்டர்களோடு பொருந்தியும் நின்ற நிலைமையினின்று நீங்கி உய்யப் போந்து நீ, சோற்றுத்துறையர்க்கே தொண்டுசெய்து என்றும் உண்டு பணி செய்வாயாக.
கு-ரை: மிண்டர் - வலிய சமணர். விரவியும் - கூடியும். வீறிலா - பெருமையில்லாத. குண்டர் - உடல் கொழுத்தவர் சமணர். கழிந்து - நீங்கி.
உய்யபோந்து - உய்தற்பொருட்டு இறைவனிடத்து வந்து. என்றும் - நாடோறும். உண்டு - பணி செய்வதற்கென்றே உண்டு. பணிசெய் - தொண்டுசெய்.