|
பொ-ரை: அறியாமையை உடைய நெஞ்சமே! ஆற்றலோடு வாழ்ந்தவனாகிய இராவணன் ஆழ்ந்துபோய் அலறுமாறு விரலால் ஊன்றினவனாகிய பூதப்படை சூழ்ந்த சோற்றுத்துறைப் பெருமானுக்கு மனமொழிமெய்களாற்றாழ்ந்து பணிசெய்வாயாக. கு-ரை: வாழ்ந்தவன் - உலகம் புகழ வாழ்ந்தவன். ஆழ்ந்து போய் அலற - கயிலையின்கீழ் ஆழப்பதிந்து அழ. பாரிடம் சூழ்ந்த - பூதகணங்கள் சூழ்ந்த; சோற்றுத்துறை என்க. தாழ்ந்து - வணங்கி. |