பாடல் எண் : 33 - 4
ஆதியா னண்ட வாணர்க் கருள்நல்கு
நீதி யானென்றும் நின்மல மேயென்றும்
சோதி யானென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
வாதி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.
4
பொ-ரை: அறியாமையை உடைய நெஞ்சமே! முதல்வனும் தேவர்களுக்கு அருள்நல்கும் நீதியனும், நின்மலனும், சோதியனும் ஆகிய சோற்றுத்துறைப் பெருமானுக்கு வேறொன்றும் வாளாவாதித்துக் காலம் போக்காது, பணிசெய்வாயாக.
கு-ரை: அண்டவாணர் - மேலுலகவாசிகளாகிய தேவர் முதலியோர். நீதியான் - நீதிவடிவினன். நின்மலன் - மலமற்றவன். வாதியாய் - பரமன் புகழ்களையே பேசுபவனாய்.