|
பொ-ரை: இரத்தலை உடையவனும், வெண்தலை ஏந்தியவனும், எல்லோராலும் பரவப்படுபவனும், படையுடையார் முப்புரங்களையும் எரியால் நிரந்தவனும், ஞானாசாரியனும் நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தான்னுமாகிய பெருமானைத் தொழுவார்கள் இவ்வுலகத்து நன்கு வாழ்வோராவர். கு-ரை: இரவனை - பிச்சையிரப்பவனை. ஏந்தியை - ஏந்தியவனை. பரவனை - எங்கும் பரவி இருப்பவனை. படையார் - ஆயுதங்கள் செறிந்த. நிரவனை - அழித்தவனை. குரவனை - முதற்பெருங் குருவாக விளங்குபவனை. கொடிவாணர் - ஒழுங்கில் வாழ்பவராவர். |