|
பொ-ரை: உலகெல்லாவற்றையும் சுட்ட திருவெண்ணீற்றினைத் திருமேனியிற்பூசி, நள்ளிருளில் பேய்களோடு சுடுகாட்டில் நடம் ஆடுபவரும், உயர்ந்த முனிவர்களும் தேவர்களும் ஆராய்ந்து காணும் திருநெய்த்தானரும் ஆகிய பெருமானை விருப்பமாகத் தொழுவார் இன்பத்தோடு கூடி வாழ்பவராவர். கு-ரை: சுட்டநீறு - திருநீறு. நள் - செறிந்த. சிட்டர் - தூய உணர்வினர். தேரும் - ஆராய்ந்து காணும். இட்டமாய் - விருப்பமாய். |