முகப்பு |
தொடக்கம் |
|
பாடல் எண் : 37 - 11 |
அடுத்து வந்த இலங்கையர் மன்னனை எடுத்த தோள்க ளிறநெரித் தானையார் கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார் கடுக்கை யானைகண் டீர்கட வூரரே.
|
|
|
11 |
|
பொ-ரை: எடுப்பேன் என்று அடுத்துவந்த இலங்கைவேந்தனை எடுக்கலுற்ற இருபது தோள்களும் இறும் வண்ணம் நெரித்த ஆனையார்; சினந்த காலனைக் காய்ந்த ஆனையார்; கடவூர்த் தலத்து இறைவர் கொன்றையணிந்த ஆனைபோல்வர்; காண்பீர்களாக. கு-ரை: அடுத்துவந்த - கயிலையை தெருங்கிவந்த கடுத்த - சினந்துவந்த கடுக்கை - கொன்றை. |
|
|