|
பொ-ரை: சிவந்த மேனியும், அதில் வெண்ணீறு அணியும் கோலமும் உடைய சிவபெருமானின்மேல் மையல் உடையவளாகி, இவள் ஆரையும் மதிக்கிலள்; கையிற் பிடித்த வெண்மழுவினனும், கழிப்பாலையில் உறைவானும் ஆகிய இறைவனே இவள் தன்மையை அறிவான். கு-ரை: மையலாகி - மயக்கங்கொண்டவளாகி. ஆரையும் மதிக்கிலள் என்க. தாயார் சொல்லையும் ஏற்றுக்கொள்ளாதவள் என்பதாம். ஐயன் - அழகியன். |