|
பொ-ரை: அறிவற்றவர்களே! நமன் தமராகிய எமதூதர் கொல்லவந்தபோது இல்லத்தில் உள்ளவர்கள் செய்யலாவது யாது? திருநல்லத்தில் எழுந்தருளியிருப்பவனும், நம்மை ஆளுடையவனும் ஆகிய பெருமான் கழல் சொல்ல வல்லமை உடையீரேல், உம்துயர்கள் தீரும். கு-ரை: தான், அசை, நமனார் தமர் - எமதூதர். கொல்ல வந்தக்கால் - உயிர்கொள்ள வந்த இடத்து. இல்லத்தார் - மனைவி மக்கள் முதலாயினார். ஏழைகாள் - அறிவில் மெல்லியரே; சொல்ல வல்லிரேல் என்க. |