|
பொ-ரை: பொய்ம்மொழிகளைப் பேசிப் பொழுது கழியாமல் துயரங்கள் தீர்தற்கு ஓர் உபாயம் சொல்லுவேன்; கேட்பீராக; தக்கன் வேள்வியைத் தகர்த்த தீவண்ணனாகிய திகம்பரன் உறைகின்ற திருநல்லம் நண்ணி வழிபடுதலே உமக்கு நன்மை. கு-ரை: பொக்கம் - பொய்; உலகியலைப் பற்றியன. தீர்வகை - தீரும்வழி. தகர்த்த - அழித்த. நண்ணுதல் - அடைதல். நக்கன் - நிர்வாண கோலத்தினன். |