|
பொ-ரை: காலை மாலை ஆகிய சந்திகளில் வணங்கப் படுவானும், யோகநெறி தலைப்படுவாருடைய புந்தியில் உறைபவனும், தேவர்களால் தொழப்படும் அந்திவானத்தைப்போன்ற செம்மேனியானும் ஆகிய ஆமாத்தூர் அழகனைச் சிந்திக்காதவர்கள் தீவினையாளரே ஆவர். கு-ரை: சந்தியானை - மூன்று சந்தியாகாலங்களிலும் தியானிக்கப் படுகிறவனை. சமாதி - யோகநிஷ்டை; அழுந்தியறிதல். புந்தி - மனம். புத்தேளிர் - தேவர். அந்தியானை - அந்தி வண்ணனை; அல்லது அழகிய தீயின் உருவினன் என்க. அழகன் - தலத்து இறைவன் பெயர். |