|
பொ-ரை; சிந்தையுள் சிவமாகிநின்ற செம்மையினோடு, அந்தியாகவும், அனலாகவும், புனலாகவும், வானமாகவும் நினைவார் புத்தியாகிய அந்தக்கரணமாகவும் எல்லாவற்றுள்ளும் புகுந்து, உள்ளத்தில் நிறைந்த எந்தையாரின் கச்சிஏகம்பத்தை ஏத்தித் தொழுவீர்களாக. கு-ரை; ஒளித்த சிந்தை -உயிரறிவு. சிவம்-இன்பம். செம்மை - பிறழாமை. அந்தியாய் - அந்திக்காலமாய். புந்தி-அறிவு, |