பாடல் எண் : 48 - 9
பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்திய
கைய னைக்கச்சி யேகம்பம் மேவிய
ஐய னைத்தொழு வார்க்கில்லை யல்லலே.
9
பொ-ரை: அனைத்துப் பொய்யையும் விட்ட உயர்ந்தவர் புந்தியுள் மெய்யாகவிளங்குபவனும், சுடர்விடுகின்ற வெண்மழுஏந்திய கையை உடையவனும் ஆகிய கச்சியேகம்பத்தை விரும்பிப் பொருந்திய தலைவனைத் தொழுவார்க்கு அல்லல்கள் இல்லையாம்.
கு-ரை: புந்தியுள்- மனத்துள். மெய்யனை - உண்மைப் பொருளாய் விளங்குபவனை. அல்லல் - துன்பம்.