பாடல் எண் : 49 - 10
பாலை யாடுவர் பன்மறை யோதுவர்
சேலை யாடிய கண்ணுமை பங்கனார்
வேலை யார்விட முண்டவெண் காடர்க்கு
மாலை யாவது மாண்டவ ரங்கமே.
10
பொ-ரை: பாலைநிலத்தில் ஆடுபவரும், பல மறைகளை ஓதுபவரும், சேல்மீன்போன்று காதளவும் ஆடுகின்ற கண்ணை உடைய உமையொருபாகரும், கடலிற் பொருந்திய விடமுண்டவரும் ஆகிய வெண்காடர்க்கு இடிழுதவர் உறுப்புக்களாகிய எலும்புகளே மாலையாவது.
கு-ரை: பாலை ஆடுவார் - பால் அபிடேகம் கொள்பவர். சேலையாடியகண் - மீனைப்போன்ற கண்கள். வேலை - கடல். ஆர் - பொருந்திய. மாலையாவது - மாலையாகப் பயன்படுவது. மாண்டவர் அங்கம் - இறந்தவர் எலும்புகளே.