|
பொ-ரை: நெஞ்சே! கொள்ளியாகிய வெவ்விய தழலைவீசி நின்று ஆடுபவரும் ஒள்ளிய பூதகணங்கள் சூழ்பவரும், உமைபங்கரும், வெள்ளிய திருவெண்ணீற்றினரும், அயிராவணம் என்ற ஆனைக்குரியவரும், விடையேறிய தெளிவுடையவரும் ஆகிய பெருமானுக்குரிய திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக. கு-ரை: கொள்ளி வெந்தழல் - கொள்ளிக் கட்டையில் பற்றிய வெவ்விய நெருப்பு. வீசி - சுழற்றி ஆடுவார்; அனலேந்தியாடுவார் என்பதாம். ஒளி பொருந்திய கணம் - பூதகணங்கள், வெள்ளியன் - திருநீற்றுப்பூச்சால் வெண்மை நிறமுடையவன். கரியன் - அகோரமுகத்தை உடையவன். பசு - இங்கு எருது. தெள்ளியன் - தெளித்த அறிவினன். |