|
பொ-ரை: நெஞ்சே! பட்டமும், இண்டைமாலைகளும் கொண்டு அன்பர்கள் "உயர்ந்தவனே! ஆதியே!" என்று சிந்தைசெய்ய நடனமாடும் மூர்த்தியாகவும், ஞானச்சுடராய் நின்ற அட்டமூர்த்தியாகவும் உள்ள பெருமானின் திருவெண்காடடைந்து வழிபடுவாயாக. கு-ரை: பட்டம் - நெற்றியிலணியும் அணிகலன். இண்டை - கண்ணி. சிட்டன் - மேலானவன். ஆதி - தலைவன். சிந்தை செய்ய - மனத்தால் தியானிக்க. |