|
பொ-ரை: பிரமனும் திருமாலும் காண்கிலாதவனும், எங்கும் நிறைகின்ற தன்மையுள் நின்று அருள் செய்தவனுமாகிய பெருமான் உறையும் மாண்பினை உடைய திருவண்ணாமலையைக் கைகளாற்றொழுதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் கெடும். கு-ரை: மறையினான் - நான்குவேதங்களை ஓதும் தொழில் பூண்ட பிரமன். நிறையும் நீர்மை - எங்கும் நிறைந்த தன்மை `இங்குற்றேனென்று லிங்கத்தே தோன்றினான்' என்பர் பின்னும். பறையும் - கெடும். |