பாடல் எண் : 51 - 10
வெங்கண் வாளர வாட்டி வெருட்டுவர்
அங்க ணாரடி யார்க்கருள் நல்குவர்
செங்கண் மாலயன் தேடற் கரியவர்
பைங்க ணேற்றினர் பாலைத் துறையரே.
10
பொ-ரை: திருப்பாலைத்துறையர், வெவ்விய கண்ணை உடைய வாளரவை ஆட்டி அச்சுறுத்துவர்; அடியார்க்கு அருள் வழங்குபவர்:செங்கண்ணை உடையமாலும் அயனும் தேடற்கு அரியவர்; பைங்கண்ணை உடைய இடபத்தை வாகனமாக உடையவர்.
கு-ரை: வெங்கண்-கொடிய கண், வாள் அரவு-ஒளி பொருந்திய பாம்பு ஆட்டி - ஆடச்செய்து. வெருட்டுவர்-தோற்றத்தால் அச்சம் விளைவிப்பவர். அங்கணார்-அழகிய கருணை பொருந்திய கண்களை உடையவர்.