|
பொ-ரை: மருவிய புதுமலர்களாகிய மல்லிகையும் செண்பகமும் உதிர்ந்து பரவிய நீர்ப்பரப்பை உடைய பொன்னிக் கரையிலுள்ள திருப்பாலைத்துறையர்,கொடுகொட்டி, கொக்கரை, பண் பொருந்திய வீணை ஆகிய வாச்சியங்களின் இசையினை விரவியவரும், குரவரும் ஆவர். கு-ரை: குரவனார்-குருவாக இருப்பவர். பண்-இசை.கெழுமிய-பொருந்திய. மருவு-அணிந்த, பொருந்திய. நாண்மலர் - புது மலர். மலராகிய மல்லிகை சண்பகம் என்க. பரவு-பரவிய. |