பாடல் எண் : 52 - 3
ஓத மார்கட லின்விட முண்டவர்
ஆதி யாரய னோடம ரர்க்கெலாம்
மாதொர் கூறர் மழுவல னேந்திய
நாதர்போல் திரு நாகேச் சரவரே.
3
பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர் அலைகள் பொருந்திய கடலின் விடம் உண்டவர்; அயன் தேவர்களாதியாகிய உலகங்களுக்கெல்லாம் ஆதியாயவர்; உடையொரு பாகர்; மழுவினை வலக்கையில் ஏந்திய நாதர் ஆவர்.
கு-ரை: ஒதம்-அலை ஆர்-பொருந்திய; அயனோடு அமரர்க்லெ்லாம் ஆதியார் என்க. ஆதியார்-முதலானவர். அயன்-பிரமன். வலன்-வலது திருக்கரம். போல் -அசை.