|
பொ-ரை: பூண், நாண், மாலை முதலியவற்றைப் பொருந்த உடையவரும், அழகிய மேருமலையாகிய வில்லிடை நாணுடன் கூடிய அம்பினால், பகைவர் மும்மதில்களை எய்தவர் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் காணேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? கு-ரை: பொருந்த-தமக்கு ஏற்ற வரையில். பூண்-அணிகலன.் நாண்-பூணநூல் முதலிய கயிறுகள். ஆரம் -மலர்மாலைகள். நாக நாண்வரை வில்லிடை-இமயவில்லின் வாசுகிப் பாம்பாகிய நாணில். பேணார்-பகைவர். |