|
பொ-ரை: பண்வடிவானவரும், பவளத்தொகுதி போன்ற மாமணி மேனியுடைய அண்ணலும், தேவர்கள் தொழும் முதல்வரும், திருநீற்றுப்பொடியணிந்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தை நண்ணினாலல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? கு-ரை: பண்ணினை - இசை வடிவானவனை. பவளமாமணித்திரள் - பவளமணிக்குவியல் போன்ற. ஆதியை - முதன்மையானவனை. நண்ணில் அல்லது - சென்று தொழுதால் அல்லாமல். சுண்ணம் - வாசனைப்பொடி. வெண்பொடியையே வாசனைப் பொடியாக அணிந்தவர். |