|
பொ-ரை: திருநீறு அணிந்த பெருந்தோளராகிய மலமற்றவரும், இடபக்கொடியுடையாரும் ஆகிய பெருமான் உறைவதும் புனல் பாய்கின்ற கெடில ஆற்றினுடைய கரையில் உள்ளதுமாகிய திருவதிகை வீரட்டத்தைக் கூறினாலல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? கு-ரை: தடம்-பெரிய. நின்மலன்-மலமற்றவன். ஆறுடைக்கெடிலம்-பல கால்வாய்களாகிய வழிகளை உடைய கெடிலம். ஏறுடைக்கொடி-இடபக்கொடி. |