|
பொ-ரை: மழைநீர் வந்து இழிகின்ற கெடில நதியின் கரையில் உள்ளதும், வேலிகள் சூழ்ந்து எழில் உடையதுமாகிய திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, ஓலமிடும் வண்டுகள் ஒலிக்கும் எட்டுவகைப்பட்ட மலர்களால் தம்மைக் காலத்தே வந்து வழிபடுவார்களின் வினையைத் தீர்ப்பவர். கு-ரை: ஒலிவண்டறை- ஓலமிடுவதாகிய வண்டுகள் ஒலிக்கின்ற. காலை-காலையிலே. ஆல் அசை. ஆலி-ஒலித்து. கூடிவேலி சூழ்ந்து-வேலிபோலச் சூழ்ந்து. |