பாடல் எண் : 56 - 2
முத்தி னைமுத லாகிய மூர்த்தியை
வித்தி னைவிளை வாய விகிர்தனைக்
கொத்த லர்பொழில் சூழ்தரு கோளிலி
அத்த னைத்தொழ நீங்கும்நம் அல்லலே.
2
பொ-ரை: முத்தினைப் போல்வானும், உலக முதலாக உள்ள திருவுரு உடையோனும், வித்தும் விளைவும் ஆகிய மேலானவனும், பூங்கொத்துக்களை உடைய பொழில்கள் சூழ்ந்த கோளிலியில் உறையும் அத்தனும் ஆகிய பெருமானைத் தொழ நம் அல்லல்கள் நீங்கும்.
கு-ரை: முத்தினை-முத்துப்போன்றவனை. முதலாகிய-முதற் பொருளாகிய. வித்தினை-உலகிற்கு மூலகாரணனாய் இருப்பவனை. விளைவாய விகிர்தனை-உலகில் எல்லாமாய் விரிந்து விளைந்து நிற்பவனை. விகிர்தன்-ஒன்றோடொன்று ஒவ்வாத போக, யோக, கோர வடிவங்களை உடையவன். அல்லல்-துன்பம். முன் பாட்டில் வினையாகிய காரணம் அழியும் என்றார். இங்கு அதன் காரியமாகிய துன்பம் கெடும் என்கிறார்.