|
பொ-ரை: வெள்ளிய அலைகளை உடைய கடல் விடம் உண்ட ஒப்பற்ற திருநீலகண்டனும் நெஞ்சு கலந்து பொழுமவர்க்கு அன்பே வடிவாய் அருள்புரிபவனும், மேகங்கள் பொருந்துகின்ற அழகிய சோலைகளை உடைய கோளிலியில் விரும்பி உறையும் தேவனுமாகிய பெருமானைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை. கு-ரை: வெண்டிரைப்பரவை -வெள்ளிய அலைகளோடு கூடிய கடல். கண்டனை- கழுத்தை உடையவனை கலந்தார் தமக்கு- அன்பால் தம்மோடு மனமொத்தவர்க்கு("கலந்த அன்பாகி" தி.8 திருவாசகம்.) கொண்டலம் பொழில்-மேகங்கள் சூழ்ந்த பொழில். அண்டனை-எல்லா உலகமுமாயவனை. |