பாடல் எண் : 57 - 8
நீதி யாற்றொழு வார்கள் தலைவனை
வாதை யான விடுக்கும் மணியினைக்
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே.
8
பொ-ரை: முறையாகத் தொழுவார்களது தலைவனும், துன்பங்களாயினவற்றை நீக்கும் செம்மணி போல்வானும், வண்டுகள் கிண்டியொலிக்கும் மலர் வனம் உடைய திருக்கோளிலியில் வேதநாயகனுமாகிய பெருமானின் பாதங்களை விரும்புவீராக.
கு-ரை: நீதியால் - முறையாக. வாதை - துன்பம். விடுக்கும் - நீக்கும். 7ஆவது பாடல் பின்னிரண்டு வரிகளே இங்கும் அமைந்து உள்ளன.