முகப்பு |
தொடக்கம் |
|
பாடல் எண் : 6 - 4 |
விடையு மேறுவர் வெண்தலை யிற்பலி கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல் உடையுஞ் சீரை யுறைவது காட்டிடை அடைவர் போலரங் காகவா ரூரரே.
|
|
|
4 |
|
பொ-ரை: திருவாரூர்ப் பெருமான், விடையும் ஏறுவர்; வெண்தலையிற் பலி பெறுவதற்கு இல்லங்களின் முன்புறந்தோறும் திரியும் கண்ணுதலார்; உடையாகச் சீரையைக் கொண்டவர். உறைவதற்குச் சுடு காட்டையே அரங்கமாக அடைவர். கு-ரை: சீரை - கிழிந்த சீலை அல்லது மரவுரி. |
|
|