|
பொ-ரை: குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன், சினந்த தேரை உடைய இராவணனது, திருக்கயிலையை எடுக்கலுற்ற தோள்களும் தலையும் இற்று, அவன் அலறும்படியாகத் திருவிரலை அடுத்தவன்; பின் அவன் இன்னிசை கேட்டு அருள்கொடுத்தவன் ஆவன். கு-ரை: கடுத்த - விரைவான். தலையிற்றலற -தலை நெரிந்தலற. விரல் அடுத்தலும் -விரல் ஊன்றலும். |