பாடல் எண் : 63 - 5
ஞாலத் தார்தொழு தேத்திய நன்மையன்
காலத் தான்உயிர் போக்கிய காலினன்
நீலத் தார்மிடற் றான்வெள்ளை நீறணி
கோலத் தான்குரங் காடு துறையனே.
5
பொ-ரை: குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன் உலகத்தாராற் றொழுதேத்தப்பட்ட நன்மை உடையவனும், காலன் உயிர்போகச் செய்த திருக்காலை உடையவனும், நீலநிறம் நிறைந்த திருமிடற்றை உடையவனும், வெண்ணீறணிந்த கோலத்தை உடையவனும் ஆவன்.
கு-ரை: ஞாலத்தார் -உலகத்தார். காலத்தான்-காலன், இயமன். நீலம் ஆர்மிடறு -நீலக்கறை பொருந்திய கழுத்து; அத்து சாரியை.