பாடல் எண் : 65 - 7
ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன்
வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர்
பாதி யானான் பரந்த பெரும்படைப்
பூத நாதன்தென் பூவனூர் நாதனே
.
7
பொ-ரை: அழகிய பூவனூர் இறைவன் ஆதியில் தோன்றியவனும், தேவர்களால் அருச்சிக்கப்படுபவனும், வேதம் ஓதும் நாவினனும், மலைமங்கையை ஒரு பாதியிற் கொண்டவனும், பரவிய பெரும் படைக்கலங்களை உடைய பூதநாதனும் ஆவன்.
கு-ரை: ஆதிநாதன் - முதன்மையான தலைவன். அர்ச்சிதன் அர்ச்சிக்கப்படுபவன். வேதநாவன் - வேதமோதும் திருவாயை உடையவன். வெற்பின் மடப்பாவை - இமயமலை அரசனின் புதல்வி. பசந்த - மிகுந்த. பூதப்படைநாதன் என்க.