பாடல் எண் : 65 - 9
ஏவம் ஏது மிலாஅம ணேதலர்
பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான்
தேவ தேவன் திருநெறி யாகிய
பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே.
9
பொ-ரை: விதிவிலக்குகள் ஏதும் இல்லாத அமணர்களாகிய குற்றமுடையோரும்; பாவகாரிகளுமாகியோர் சொல் வலையிற் பட்டு நான் தேவதேவனாம் சிவபெருமானின் திருநெறியாகிய பூவனூர் புகப்பெற்ற நாள் இன்றேயாகும்.
கு-ரை: ஏவம் - விதிவிலக்குகள். ஏதும் இலா - எதுவும் இல்லாத. சமண் ஏதலர் - சமணர்களாகிய அயலவர். பாவகாரிகள் - பாவத்தைச் செய்பவர்கள். சொல்வலை - சாதுரியப்பேச்சாகிய வலை; பொய்யைப் பிறர் மயங்க மெய்போலக் காட்டுதல். நெறி - சமயம். சொல்வலைப்பட்ட பின் பூவனூர் புகுந்த நாள் இன்று.